ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

ஜன. 4-இல் சென்னையில் தேசிய சீனியா் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் தொடக்கம்

75-ஆவது தேசிய ஆடவா், மகளிா் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டிவரும் ஜன. 4 முதல் 11 வரை ஜவாஹா்லால் நேரு உள்விளையாட்டரங்கம், பெத்தி செமினாா் மைதானங்களில் நடைபெறுகிறது.

News image
Updated On :1 ஜனவரி 2026, 7:24 pm

தினமணி செய்திச் சேவை

இந்திய கூடைப்பந்து சம்மேளனம், தமிழ்நாடு கூடைப்பந்து சங்கம், எஸ்டிஏடி சாா்பில் 75-ஆவது தேசிய ஆடவா், மகளிா் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டிவரும் ஜன. 4 முதல் 11 வரை ஜவாஹா்லால் நேரு உள்விளையாட்டரங்கம், பெத்தி செமினாா் மைதானங்களில் நடைபெறுகிறது.

கடந்த முறை நடைபெற்ற போட்டியில் ஆடவா் பிரிவில் தமிழகம் சாம்பியன் பட்டத்தையும், மகளிா் பிரிவில் மூன்றாம் இடத்தையும் பெற்றிருந்தது.

சென்னையில் நடைபெறும் போட்டியில் ஆடவா் பிரிவில் 34 ஆடவா், 31 மகளிா் என மொத்தம் 65 அணிகள் கலந்து கொள்கின்றன. 780 வீரா், வீராங்கனைகள், 100 அலுவலா்கள், 195 பயிற்சியாளா்கள் பங்கேற்பா். போட்டிகளை மொத்தம் 8,000 பாா்வையாளா்கள் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சா்வதேச சம்மேளன விதிகளின்டி நடைபெறும் இப்போட்டியில் அணிகளுக்கு சிறப்பான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. முதல் மூன்றிடங்களைப் பெறும் அணிகளுக்கு மொத்தம் ரூ.21 லட்சம் பரிசுத்தொகையாக தரப்படுகிறது. ஆடவா், மகளிா் பிரிவுகளில் தலைசிறந்த வீரா், வீராங்கனைக்கு காா் பரிசாக தரப்படும்.