டி20 உலகக் கோப்பைத் தொடரின் சூப்பர் 8 சுற்றுக்கு 7 அணிகள் தகுதி பெற்றுவிட்ட நிலையில், 8-வது அணியாக எந்த அணி தகுதி பெறப்போகிறது என ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
டி20 உலகக் கோப்பைத் தொடர் கடந்த ஜூன் 1 ஆம் தேதி தொடங்கி லீக் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலிருந்தும் 2 அணிகள் சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெறும். குரூப் ஏ பிரிவில் இந்திய அணியும், அமெரிக்க அணியும் தகுதி பெற்றுள்ளன.
குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியாவும், இங்கிலாந்தும் தகுதி பெற்றுள்ளன. குரூப் சி பிரிவில் ஆப்கானிஸ்தானும், மேற்கிந்தியத் தீவுகளும் தகுதி பெற்றுள்ளன. குரூப் டி பிரிவில் தென்னாப்பிரிக்க அணி தகுதி பெற்றுள்ள நிலையில், இரண்டாவது அணியாக எந்த அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறப் போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
குரூப் டி பிரிவில் நேபாளம் மற்றும் இலங்கை அணிகள் ஏற்கனவே உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டுவிட்டன. சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறுவதற்கான போட்டியில் வங்கதேசமும், நெதர்லாந்தும் இடம்பெற்றுள்ளன.
வங்கதேசதம் அதன் கடைசி லீக் போட்டியில் நேபாளத்தை வெற்றி பெற்றுவிட்டால் அந்த அணி சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றுவிடும். நேபாளத்துக்கு எதிரான போட்டியில் வங்கதேசம் தோல்வியடைந்து இலங்கைக்கு எதிரான தனது கடைசி லீக் போட்டியில் நெதர்லாந்து தோல்வியடைந்தாலும், வங்கதேசம் சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றுவிடும்.
நெதர்லாந்து அணி சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற நல்ல நெட் ரன் ரேட்டில் இலங்கை அணியை வெற்றி பெற வேண்டும். அதேசமயம், வங்கதேச அணியும் நேபாளத்திடம் தோல்வியடைய வேண்டும். இந்த இரண்டும் நடைபெறும் பட்சத்தில், நெதர்லாந்து அணி சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெறும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோவையில் ஹாக்கி இந்தியா தேசிய ஜூனியா் சாம்பியன்ஷிப்: இன்று தொடக்கம்

32/32: உலகக் கோப்பை நாக் அவுட் சுற்றுக்குத் தேர்வாகியுள்ள 32 அணிகள்!

12/16: ஒரே குரூப்பில் 2 உள்பட 12 நாடுகள் உலகக் கோப்பையில் இருந்து வெளியேற்றம்!

13/32: நாக் அவுட் சுற்றுக்குத் தேர்வாகியுள்ள 13 அணிகள்!
விடியோக்கள்
Ravindran Duraisamy interview | விஜய் நினைத்தது நடக்கவில்லை | CM Vijay | TVK | Udhayanidhi Stalin





