
டி20 லீக் போட்டிகளைக் காட்டிலும் மேற்கிந்தியத் தீவுகளுக்காக விளையாடுவதற்கு வீரர்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என அந்த அணியின் கேப்டன் ரோவ்மன் பௌவல் தெரிவித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பைத் தொடரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்ததன் மூலம் மேற்கிந்தியத் தீவுகள் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை தவறவிட்டது. கடந்த இரண்டு டி20 உலகக் கோப்பைத் தொடர்களிலும் விரைவில் வெளியேறிய மேற்கிந்தியத் தீவுகள் நடப்பு டி20 உலகக் கோப்பைத் தொடரில் அரையிறுதிக்கு அருகில் வந்து வெளியேறியுள்ளது.
இந்த நிலையில், டி20 லீக் போட்டிகளைக் காட்டிலும் மேற்கிந்தியத் தீவுகளுக்காக விளையாடுவதற்கு வீரர்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என அந்த அணியின் கேப்டன் ரோவ்மன் பௌவல் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: மேற்கிந்தியத் தீவுகள் அணி மீதான பார்வை அதிகரித்துள்ளது. நாங்கள் சரியான பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறோம். கடந்த ஓரிரு ஆண்டுகளாக மேற்கிந்தியத் தீவுகள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. டி20 லீக் போட்டிகளைக் காட்டிலும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக விளையாடுவதற்கு வீரர்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
அணியின் கேப்டனாக மேற்கிந்தியத் தீவுகளுக்காக வீரர்கள் விளையாடுவதை தொடர்ந்து ஊக்குவிப்பேன். அதிக அளவிலான ஊதியம் கிடைக்கும் டி20 லீக் கிரிக்கெட், சிறிய கிரிக்கெட் வாரியங்களைக் கொண்டுள்ள மேற்கிந்தியத் தீவுகள் போன்ற அணிகளுக்கு சிறந்த வீரர்களைக் கொண்ட அணியை உருவாக்குவதை கடினமாக்குகிறது. நடப்பு டி20 உலகக் கோப்பைத் தொடர் மட்டுமல்லாது, கடந்த ஓராண்டாக மேற்கிந்தியத் தீவுகள் சிறப்பாக விளையாடி வருகிறது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.