‘நாக் அவுட்’ பயத்திலிருந்து மீண்டு இங்கிலாந்தை பழி தீர்க்குமா இந்திய அணி?

டி20 உலகக் கோப்பையின் அரையிறுதிப் போட்டியில் இந்தியா நாளை (ஜூன் 27) இரவு இங்கிலாந்துடம் மோதுகிறது.
ரோஹித் சர்மா, ஜாஸ் பட்லர்.
ரோஹித் சர்மா, ஜாஸ் பட்லர். படம்: டி20 உலகக் கோப்பை / எக்ஸ்
Published on
Updated on
1 min read

சூப்பர் 8 சுற்றில் அசத்தலாக விளையாடிய இந்திய அணி அரையிறுதிப் போட்டியில் நாளை இங்கிலாந்துடம் மோதுகிறது. இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

இந்திய அணி பெரும்பாலும் நாக் அவுட் சுற்றுகளில் தோல்வியை அடைந்துவிடுகின்றன. ஒன்று அரையிறுதி அல்லது இறுதிப் போட்டிகளில் தோல்வியடைகிறது.

கடைசியாக இந்திய அணி 2011இல் எம்.எஸ்.தோனி தலைமையில் ஒருநாள் உலகக் கோப்பையை வென்றது. அதன்பிறகு ஐசிசியின் எந்த ஒரு உலகக் கோப்பையையும் இந்திய ஆடவர் அணி வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ரோஹித் சர்மா, ஜாஸ் பட்லர்.
வாழ்க்கையின் விளையாட்டு! டேவிட் வார்னரின் ஓய்வுக்கு யுவ்ராஜ் சிங் உருக்கம்!

இந்நிலையில் நாளைய போட்டியில் இங்கிலாந்தினை வெல்லுமா மேலும் 2022இல் இங்கிலாந்திடம் ஏற்பட்ட தோல்விக்கு அந்த அணியை பழிவாங்குமா எனவும் இந்திய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

டி20 உலகக் கோப்பை போட்டி அரையிறுதி ஆட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்டால் இந்திய-தென்னாப்பிரிக்க அணிகள் நேரடியாக இறுதிச் சுற்றுக்கு தகுதி பெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரோஹித் சர்மா, ஜாஸ் பட்லர்.
சூர்யகுமாரை பின்னுக்கு தள்ளி உலகின் நம்.1 வீரரானார் டிராவிஸ் ஹெட்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com