நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

‘நாக் அவுட்’ பயத்திலிருந்து மீண்டு இங்கிலாந்தை பழி தீர்க்குமா இந்திய அணி?

டி20 உலகக் கோப்பையின் அரையிறுதிப் போட்டியில் இந்தியா நாளை (ஜூன் 27) இரவு இங்கிலாந்துடம் மோதுகிறது.

News image

ரோஹித் சர்மா, ஜாஸ் பட்லர். - படம்: டி20 உலகக் கோப்பை / எக்ஸ்

Updated On :26 ஜூன் 2024, 4:40 pm IST

சூப்பர் 8 சுற்றில் அசத்தலாக விளையாடிய இந்திய அணி அரையிறுதிப் போட்டியில் நாளை இங்கிலாந்துடம் மோதுகிறது. இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

இந்திய அணி பெரும்பாலும் நாக் அவுட் சுற்றுகளில் தோல்வியை அடைந்துவிடுகின்றன. ஒன்று அரையிறுதி அல்லது இறுதிப் போட்டிகளில் தோல்வியடைகிறது.

கடைசியாக இந்திய அணி 2011இல் எம்.எஸ்.தோனி தலைமையில் ஒருநாள் உலகக் கோப்பையை வென்றது. அதன்பிறகு ஐசிசியின் எந்த ஒரு உலகக் கோப்பையையும் இந்திய ஆடவர் அணி வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நாளைய போட்டியில் இங்கிலாந்தினை வெல்லுமா மேலும் 2022இல் இங்கிலாந்திடம் ஏற்பட்ட தோல்விக்கு அந்த அணியை பழிவாங்குமா எனவும் இந்திய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

டி20 உலகக் கோப்பை போட்டி அரையிறுதி ஆட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்டால் இந்திய-தென்னாப்பிரிக்க அணிகள் நேரடியாக இறுதிச் சுற்றுக்கு தகுதி பெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.