நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

எழுத்தாளர் மணவை முஸ்தபா நூல்கள் நாட்டுடைமை

சென்னை, மார்ச் 31: அறிவியல் தமிழ் எழுத்தாளர் மணவை முஸ்தபாவின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். இதற்காக மணவை முஸ்தபாவுக்கு பரிவுத் தொகையாக ரூ.10 லட்சம் அளிக்கப்ப

News image
Updated On :27 டிசம்பர் 2023, 8:48 pm IST

சென்னை, மார்ச் 31: அறிவியல் தமிழ் எழுத்தாளர் மணவை முஸ்தபாவின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

இதற்காக மணவை முஸ்தபாவுக்கு பரிவுத் தொகையாக ரூ.10 லட்சம் அளிக்கப்பட்டது.

இதுகுறித்து தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்ட செய்தி:

அறிவியல் தமிழ் எழுத்தாளர் மணவை முஸ்தபா 40 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்த் தொண்டு ஆற்றி வருகிறார். மருத்துவக் கலைச்சொல் களஞ்சியம், கணினிக் கலைச்சொல் களஞ்சிய அகராதி போன்ற அவரது நூல்கள் பரிசுகள் பல பெற்றுள்ளன.

மேலும், தமிழக அரசின் கலைமாமணி விருது, திரு.வி.க. விருது ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்.

இப்போது முழுமையாகப் பேசவோ, எழுந்து செயல்படவோ இயலாத நிலையில், உடல்நலம் குன்றியுள்ள நிலையில் உள்ளதாக முதல்வர் கருணாநிதிக்கு எழுதிய கடிதத்தில் அவர் தெரிவித்திருந்தார்.

மருத்துவச் செலவுக்கு பயன்படும் வகையில், தமது படைப்புகள் அனைத்தையும் நாட்டுடைமையாக்கி, தமக்குப் பரிவுத் தொகை வழங்க வேண்டும் என்று கோரியிருந்தார்.

அவரது கோரிக்கையை ஏற்று, சிறப்பு நிகழ்வாகக் கருதி மணவை முஸ்தபாவின் படைப்புகளை நாட்டுடைமையாக்கி, அவருக்கு ரூ.10 லட்சம் பரிவுத் தொகை வழங்க முதல்வர் கருணாநிதி புதன்கிழமை உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.