ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

நெல்லுக்கு மாற்றாக வசம்பு: லாபம் பெறலாம்

சிதம்பரம், ஆக. 4: ஆள் பற்றாக்குறை, கூலி உயர்வு, வேளாண் இடு பொருள்களின் விலை உயர்வு, நெல்லுக்கு கட்டுப்படியான விலை இல்லாதது உள்ளிட்ட பல்வேறு இன்னல்களுடன் உள்ள விவசாயிகள் நெல்லுக்கு மாற்றாக அதிக லாபம் த

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 8:04 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம், ஆக. 4: ஆள் பற்றாக்குறை, கூலி உயர்வு, வேளாண் இடு பொருள்களின் விலை உயர்வு, நெல்லுக்கு கட்டுப்படியான விலை இல்லாதது உள்ளிட்ட பல்வேறு இன்னல்களுடன் உள்ள விவசாயிகள் நெல்லுக்கு மாற்றாக அதிக லாபம் தரும் மருத்துவப் பயிரான வசம்புவை பயிரிடலாம்.

அஜீரணம், வயிற்றுப்போக்கு, தலைவலி, மூல வியாதி, இதயநோய், கண், காது நோய்களுக்கு மருந்தாக விளங்குகிறது வசம்பு. சிறு குழந்தைகள் உணவு செரிக்காமல் வயிற்றுவலிக்காக அழுதால் கிராமப்புறங்களில் இன்றும் வசம்பு விழுதை பாலில் கலந்து கொடுப்பார்கள். சிறிது நேரத்தில் வயிற்றுவலி நின்று குழந்தைக்கு பசிக்கத் தொடங்கிவிடும்.

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் ஏற்றுமதி பயிரான வசம்புவை காவிரி டெல்டா விவசாயிகள் நெற்பயிருக்கு மாற்றாக பயிரிடலாம் என முன்னோடி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து விவசாயிகள் சங்கத் தலைவர் கே.வி.இளங்கீரன் தெரிவித்தது: காவிரி டெல்டா பகுதியான நாகை மாவட்டத்தில் சீர்காழி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசம்புவை விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் வசம்பு தற்போது அதிகமாக பயிரிடப்படுகிறது. வசம்பு 10 மாத பயிராகும்.

அதன் வேர் பகுதியில் விளைந்த வசம்பை நன்றாக காய வைத்து பின்புதான் விற்பனை செய்ய முடியும். வசம்பை எந்த நோயும் தாக்குவதில்லை. இதனால் பூச்சிமருந்து அடிக்க வேண்டிய அவசியம் இல்லை. சாகுபடி செலவும் நெற்பயிருக்கு ஆவதைவிட ஏக்கர் ஒன்றுக்கு 2 முதல் 3 டன் வரை மகசூல் கிடைக்கும். ஒரு டன் ரூ.16 ஆயிரம் முதல் ரூ.28 ஆயிரம் வரை விற்பனையாகும்.

மருத்துவப் பயிரான வசம்பு ஏற்றுமதியாகும் பொருள்களில் ஒன்றாகத் திகழ்வதால் அதற்கு வேளாண் சந்தையில் நல்ல கிராக்கி உள்ளது. மேலும் அறுவடைக்கு முன்பு வசம்பிலிருந்து பக்கவாட்டில் வெடித்து வரும் சிம்புகளை நாற்றாக விற்பனை செய்யலாம். ஒரு ஏக்கரில் 4 ஏக்கருக்கு உரிய நாற்றும் கிடைக்கிறது. வசம்பு பயிரிடும் செலவில் 25 சதவீதத்தை மத்திய அரசு தேசிய மூலிகைப் பயிர்கள் வாரியம் மானியமாக வழங்குகிறது.

தமிழக அரசு வேளாண் துறையினர் நெற்பயிர்களுக்கு மாற்றுப் பயிராக வசம்பு பயிரிட விவசாயிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

மேலும் மத்திய அரசிடமிருந்து மானியத்தை பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்கிறார் கே.வி.இளங்கீரன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.