இதற்காக, மத்திய அரசு தரும் அரிசி அளவை வேண்டாம் என ஒதுக்கி விட முடியாது. குடும்பத்துக்கு மாதத்துக்கு 10 கிலோ அரிசித் திட்டத்துக்காக இந்தியா முழுவதும் 10.64 லட்சம் டன் அரிசியும், 25.43 லட்சம் மெட்ரிக் டன் கோதுமையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மார்ச் மாதத்துக்குள் இவற்றைப் பெற்றுக் கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, மார்ச்சுக்குள் 2.5 லட்சம் டன் அரிசியும், 13,200 மெட்ரிக் டன் கோதுமையும் மத்திய அரசிடம் இருந்து பெறப்படும். இதனால், ஆந்திரத்தில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு வரும் அரிசியின் அளவு படிப்படியாக குறைக்கப்படும். பற்றாக்குறை ஏற்படும் காலங்களில் மத்திய அரசிடம் இருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட அரிசி பயன்படுத்தப்படும்'' என்று உணவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.