இத் திட்டத்தில் ஆயிரம் மெகாவாட் மின்சாரம் சப்ளை செய்ய உத்தேசிக்கப்பட்டது. இதற்கு நல்ல வரவேற்பும் இருந்தது. கூடுதலாக 20 ஆயிரம் யூனிட் தேவை என்று அனுமதி பெற்றால், அந்த அளவுக்குப் பயன்படுத்தாமல் கூடுதலாக 10 ஆயிரம் யூனிட் மட்டுமே பயன்படுத்தினாலும், 20 ஆயிரம் யூனிட்டுகளுக்கு ரூ.7 என்ற அடிப்படையிலேயே கட்டணம் வசூலிக்கப்படுகிறது என ஆலை நிர்வாகத்தினர் கூறுகின்றனர். ஏற்கெனவே பயன்படுத்தும் அளவீட்டில் இந்த 10 ஆயிரம் யூனிட்டுகளைக் கழித்துக் கொண்டு, மீதி யூனிட்டுகளுக்கு பழைய அடிப்படையில் கட்டணம் கணக்கிடப்படுகிறது. அந்த வகையில் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் ஜனவரி மாதம் முழுவதற்கும் கூடுதல் யூனிட்டுகளுக்கு கணக்கிட்டு பணம் வசூலித்துவிட்டனர். ஆனால் 18-ம் தேதியில் இருந்துதான் திட்டமே தொடங்கியது. மின்சாரம் தராத 17 நாள்களுக்கும் சேர்த்து செலுத்திய தொகை இன்னும் திருப்பித் தரப்படவில்லை.