சென்னைக்கு அருகில் சுங்கச்சாவடி அமைத்துள்ளதால் சோழவரம், காரனோடை, பொன்னேரி, ஆண்டார்குப்பம், பஞ்செட்டி, அழிஞ்சிவாக்கம், தச்சூர், மாதவரம், நத்தம், பண்டிக்காவனூர் உள்ளிட்ட பகுதியில் வசிக்கும் மக்கள் பயன்படுத்தும் வாகனங்களுக்கும் சுங்கவரி செலுத்தியப் பிறகே சுங்கச்சாவடியை கடந்துச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும் சோழவரத்தில் இருந்து 10.கி.மீ. தூரமுள்ள செங்குன்றத்துக்குச் சென்று வர வேண்டும் என்றால் ரூ.100 வரை சுங்க வரி செலுத்தியப் பிறகே சென்று வர முடியும் என்ற நிலை உள்ளது. இதன் காரணமாக மேற்கண்ட இடங்களில் வசிக்கும் மக்கள் நல்லூர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடியை இடமாற்றம் செய்ய நீண்ட நாள்களாக கோரிக்கை விடுத்துள்ளனர்.