பழைய இயந்திரங்கள் முடக்கம்: இந்த நிலையில், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பாதுகாப்பு அறையில் (ஸ்ட்ராங் ரூம்) வைக்கப்பட்டுள்ள, 2006-ம் ஆண்டுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட, 1.15 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களையும், இதர உபகரணங்களையும் பாதுகாப்பாக முடக்கி வைக்குமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, உடனடியாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட வட மாவட்டங்களில் உள்ள பழைய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் சேகரிக்கப்பட்டு, திருவண்ணாமலையில் உள்ள பாதுகாப்பு அறையில் பராமரிக்கப்பட உள்ளன.