மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள்துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
/

இருளில் மூழ்கிக் கிடக்கும் மின்வாரிய அலுவலகம் !

பொன்னேரி, செப். 6: பொன்னேரி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் இரவு நேரத்தில் மின்விளக்கின்றி இருளில் மூழ்கி கிடப்பதால் அங்கு சமூக விரோத சம்பவங்கள் நடைபெற வாய்ப்புள்ளதாக அப்பகுதி மக்கள் புகார் தெ

News image
Updated On :28 டிசம்பர் 2023, 6:24 pm

எம்.சுந்தரமூா்த்தி

பொன்னேரி, செப். 6: பொன்னேரி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் இரவு நேரத்தில் மின்விளக்கின்றி இருளில் மூழ்கி கிடப்பதால் அங்கு சமூக விரோத சம்பவங்கள் நடைபெற வாய்ப்புள்ளதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

 ÷திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரியை அடுத்த வேண்பாக்கத்தில் 2 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது பொன்னேரி துணை மின் நிலையம். இங்கு அமைந்துள்ள துணை மின்நிலைய வளாகத்தில் பொன்னேரி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம், மின் வாரிய ஊழியர்களுக்கான குடியிருப்புகள் மற்றும் பல்வேறு பகுதிகளுக்கான மின்வாரிய அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.

 ÷பொன்னேரி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் அமைந்துள்ள முன்பகுதியில் தடப்பெரும்பாக்கம் கிராம ஊராட்சி சாலையும், பின்புறம் பொன்னேரி திருவொற்றியூர் நெடுஞ்சாலையும் அமைந்துள்ளது.

 ÷இங்கு அமைந்துள்ள துணை மின் நிலையத்தில் இருந்து பொன்னேரி கிழக்கு, மேற்கு என பிரிக்கப்பட்டு மின்சார வாரியம் மூலம் மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ÷பொன்னேரி நகருக்கே வெளிச்சத்தை அளிக்கும் துணை மின் நிலையத்தை ஒட்டி அமைந்துள்ள கோட்ட செயற்பொறியாளர் அலுவலத்தின் முகப்பில் மின்விளக்கு அமைக்கப்படாததன் காரணமாக இரவு நேரத்தில் அலுவலக வளாகம் முழுவதும் இருளில் மூழ்கிக் கிடப்பதாக அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

 ÷இதன் காரணமாக அங்கு இரவு நேரத்தில் சமூக விரோத சம்பவங்கள் நடைபெற்று வருவதாகவும் அப்பகுதிவாசிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

 ÷எனவே பொன்னேரி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலத்தின் முகப்பில் மின் விளக்கு அமைத்து அப்பகுதியில் வெளிச்சம் பரவ மின்வாரிய உயரதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் எதிர்பார்ப்பு.

 இருளில் மூழ்கி கிடக்கும் பொன்னேரி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.