தேர்வு முடிவுகள் தாமதம் ஏன்? விடைத்தாள்கள் அனைத்தும் திருத்தும் பணிகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முடித்துள்ளது. ஆனால், தமிழ் வழியில் படித்தோருக்கு அரசு வேலைவாய்ப்பில் 20 சதவீதம் முன்னுரிமை வழங்கப்படும் என்கிற சட்டம் அமலில் உள்ளது. அதன்படி, குரூப் 1 மற்றும் குரூப் 2 தேர்வு எழுதியவர்களில் தமிழ் வழியில் பயின்றோரில் 20 சதவீதம் பேரை ரோஸ்டர் முறையின் கீழ் தேர்வு செய்ய வேண்டும். இதற்கான பணிகளை தமிழக அரசின் பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை மேற்கொள்ள வேண்டும். இதற்கான கோப்புகள் அந்தத் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், விரைவில் அதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.