அரசு நிலங்களில் குடியிருப்போருக்கு சிறப்புத் திட்டத்தின் கீழ் வீட்டுமனைப் பட்டா வழங்குவதற்கான காலக்கெடுவை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து அக்கட்சியின் கொறடா கே. பாலகிருஷ்ணன் முதல்வர் ஜெயலலிதாவிடம் திங்கள்கிழமை அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் அரசு நிலங்களில் வீடு கட்டி குடியிருப்பவர்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கும் சிறப்புத் திட்டத்துக்கான காலக்கெடுவை 30-9-2012 முதல் 6 மாதங்களுக்கு நீட்டித்து 27-3-2013-ல் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட மூன்று நாள்களில் அதாவது 31-3-2013-க்குள் இந்த 6 மாத காலக்கெடு முடிந்துவிட்டது. இதனால் பல லட்சக்கணக்கான ஏழை மக்களுக்கு பலன் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே பட்டா வழங்குவதற்கான காலக்கெடுவை 31-3-2013 முதல் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்க வேண்டும். அனைத்து மக்களுக்கும் பட்டா வழங்கி முடிக்கும்வரை இதற்கு நிரந்தர அரசாணை வெளியிட வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!

பாலியல் வன்கொடுமைக்கு இரண்டரை வயது சிறுமி உயிரிழப்பு: ஒருவர் கைது

பங்குச்சந்தைகள் வர்த்தகம் உயர்வுடன் தொடக்கம்

முதல்வா் விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு இன்று விசாரணை
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


