நாட்டறம்பள்ளி அருகே திங்கள்கிழமை, ஏரியில் மினிபஸ் கவிழ்ந்து கைக்குழந்தை உள்பட 30 பேர் காயமடைந்தனர்.
நாட்டறம்பள்ளியில் இருந்து குறுபவானிகுண்டா பகுதிக்கு தனியாருக்கு சொந்தமான மினிபஸ் திங்கள்கிழமை சென்றது. பஸ்ûஸ சேகர் (30) ஓட்டிச் சென்றார். நாட்டறம்பள்ளியில் திங்கள்கிழமை சந்தை கூடியதால் மினிபஸ்ஸில் அதிக அளவாக 52 பயணிகள் ஏறியிருந்தனர்.
தொப்பலகுண்டா ஊராட்சி ஏரிக்கரை அருகே சென்ற போது மினிபஸ் கட்டுப்பாட்டை இழந்து 7 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. பயணிகளின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று காயமடைந்தவர்களை காப்பாற்றினர்.
இவ்விபத்தில் நாட்டறம்பள்ளியைச் சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்த 30 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு திருப்பத்தூர் அரசு மருத்துவனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்தில் விஜயலட்சுமி என்பவரின் 15 நாள் பெண் குழந்தை சிறிய சிராய்ப்புகளுடன் உயிர் தப்பியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மகாராஷ்டிரத்தில் கிணற்றுக்குள் வாகனம் விழுந்ததில் 8 பேர் பலி

அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!

அண்ணா பல்கலைக்கழகத்ததில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

மிஸ்பண்ணிடாதீங்க... பிஎஸ்என்எல் நிறுவனத்தில் ஜூனியர் டெலிகாம் அதிகாரி பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


