பாஜகவுக்கு விழும் ஒவ்வொரு வாக்கும் அரசியலமைப்பை காக்கும் விழுமியங்கள் மீது விழும் மரண அடி: மு.க. ஸ்டாலின்ஐபிஎல் போல தேர்தல் முடிவு! தில்லி தோற்று தமிழ்நாடு வெல்ல வேண்டும்! - மு.க. ஸ்டாலின்ஜன நாயகன் படம் கசிந்த விவகாரம்: 6 பேர் கைது!ஈரானுக்கு இதைவிடச் சிறந்த ஆஃபர் வழங்க முடியாது! - அமெரிக்க துணை அதிபர்ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

டீசலுக்கு இரட்டை விலை: இடைக்காலத் தடையை நீக்கக் கோரிய வழக்கில் தீர்ப்பு தள்ளிவைப்பு

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் கொள்முதல் செய்யும் டீசலுக்கு கூடுதல் விலை வசூலிக்க பிறப்பிக்கப்பட்ட

Updated On :1 ஏப்ரல் 2013, 10:29 pm

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் கொள்முதல் செய்யும் டீசலுக்கு கூடுதல் விலை வசூலிக்க பிறப்பிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்கக் கோரி மத்திய அரசு தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் தீர்ப்பினை தள்ளி வைத்துள்ளது.

அரசு போக்குவரத்துக் கழகங்கள், ரயில்வே துறை உள்பட டீசலை மொத்தமாகக் கொள்முதல் செய்வோருக்கு மட்டும் விலையை உயர்த்தி மத்திய அரசு அண்மையில் உத்தரவிட்டது.

ஆனால், சில்லறை நுகர்வோருக்கு ஒரு விலை, மொத்தமாக கொள்முதல் செய்வோருக்கு மற்றொரு விலை என மத்திய அரசு இரட்டை விலைக் கொள்கையைப் பின்பற்றுவது சரியல்ல என்று கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குத் தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, மத்திய அரசின் இந்த விலை உயர்வுக்கு இடைக்காலத் தடை விதித்து கடந்த மாதம் உத்தரவிட்டார்.

இந்த இடைக்காலத் தடையை நீக்கக் கோரி மத்திய அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீது தலைமை நீதிபதி ஆர்.கே. அகர்வால், நீதிபதி என். பால் வசந்தகுமார் ஆகியோர் சில நாள்களாக விசாரணை நடத்தி வந்தனர்.

தமிழக அரசின் சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞர் ஏ.எல். சோமையாஜி, மொத்தமாக டீசலை கொள்முதல் செய்வதற்காக கூடுதல் விலை விதித்தால் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு பெரும் நஷ்டம் ஏற்படும். இதனால் ஏழை, நடுத்தர பயணிகளுக்கும் பாதிப்பு ஏற்படும் என்று வாதிட்டார்.

மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிடர் ஜெனரல் பி.வில்சன், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு தொடர்ச்சியாக ஏற்பட்டு வரும் கடுமையான நஷ்டத்தை குறைக்கும் வகையில் பெட்ரோலியப் பொருள்களுக்கான மானியத்தைப் படிப்படியாகக் குறைப்பது என்று மத்திய அரசு முடிவு செய்தது.

அதன் ஒரு பகுதியாகவே டீசலை மொத்தமாகக் கொள்முதல் செய்வோருக்கான மானியம் குறைக்கப்பட்டு, விலை உயர்த்தப்பட்டது. மத்திய அரசின் இந்த கொள்கை முடிவுக்கு வழக்கின் ஆரம்ப நிலையிலேயே இடைக்காலத் தடை விதித்தது சரியல்ல. ஆகவே, தடையை நீக்க வேண்டும் என்று வாதிட்டார்.

அனைத்து தரப்பு வாதங்களும் திங்கள்கிழமை நிறைவடைந்ததை அடுத்து தீர்ப்பினை தள்ளி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.