உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு மற்றும் பாமாயில் ஆகியவற்றை மலிவு விலையில் வழங்கும் சிறப்பு பொது விநியோகத் திட்டம் அடுத்த ஆண்டு (2014) மார்ச் இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு மற்றும் பாமாயில் ஆகியவற்றை ரேஷன் கடைகளின் மூலம் குறைந்த விலையில் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது.
கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி முதல் இந்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரையில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும் வகையில் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவு காலாவதியானதைத் தொடர்ந்து புதிய உத்தரவை அரசு வெளியிட்டுள்ளது.
இந்த உத்தரவுப்படி ஏப்ரல் 1 ஆம் தேதி தொடங்கி அடுத்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரையில் சிறப்பு பொது விநியோகத் திட்டத்தைச் செயல்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த உத்தரவை கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலாளர் எம்.பி.நிர்மலா பிறப்பித்துள்ளார்.
எவ்வளவு நிதி ஒதுக்கீடு: துவரம் பருப்பை கொள்முதல் செய்ய ரூ. 314 கோடியும், உளுத்தம் பருப்பை கொள்முதல் செய்ய ரூ.251.81 கோடியும், பாமாயில் கொள்முதலுக்காக ரூ.449.20 கோடியையும் தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் செலவிடுகிறது. நடப்பு நிதியாண்டில் உணவுத் துறைக்காக ரூ.4,900 கோடியை மானியமாக அரசு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 15 2026) 12 ராசிகளுக்கும்! கடக ராசிக்கு வெற்றி!

விருச்சிக ராசிக்கு...! இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 15)
பாஜக கூட்டணியில் இணைய சரத் பவாருக்கு மத்திய அமைச்சா் அழைப்பு

நிா்வாக வசதிகளுக்காக சென்னை மாநகராட்சியைப் பிரிக்க வேண்டும்: கராத்தே தியாகராஜன்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


