சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

எம்பிபிஎஸ் பட்டதாரிகளுக்கு மே 12-ல் ஒரே நாளில் இரு தேர்வுகள்!

புதுதில்லியில் உள்ள அனைத்திந்திய மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் முதுநிலைப் படிப்பில் சேருவதற்கான நுழைவுத் தேர்வை மே 12ஆம் தேதி

Updated On :22 ஏப்ரல் 2013, 5:07 am IST

புதுதில்லியில் உள்ள அனைத்திந்திய மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் முதுநிலைப் படிப்பில் சேருவதற்கான நுழைவுத் தேர்வை மே 12ஆம் தேதி நடத்துகிறது. தமிழக அரசின் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் அதே நாளில் நேரடி பணி நியமனத்துக்கான தேர்வையும் நடத்துகிறது.

ஒரே நாளில் இரு தேர்வுகள் நடைபெறுவதால், பணியா?, உயர்படிப்பா என்று முடிவெடுக்க முடியாமல் எம்.பி.பி.எஸ். பட்டதாரிகள் தடுமாற்றத்துடன் உள்ளனர்.

6 ஆண்டு முதுநிலை மருத்துவப் படிப்புகளான எம்.டி., எம்.எஸ்., எம்.டி.எஸ். ஆகியவற்றில் சேருவதற்கான விண்ணப்பங்களை ஏப்ரல் 6ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் பதிவு செய்ய அனைத்திந்திய மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் காலஅவகாசம் அளித்திருந்தது. இதற்கான நுழைவு தேர்வு மே 12ஆம் தேதி என ஏற்கெனவே அப்பல்கலைக் கழகம் தேதி குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், தமிழ்நாடு அரசின் சார்பில் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், 911 காலி பணியிடங்களுக்கு எம்.பி.,பி.எஸ். படித்த உதவி மருத்துவர் (பொது), 1,163 இடங்களுக்கு சிறப்பு உதவி மருத்துவர் பணியிடங்களை தாற்காலிகமாக நிரப்புவதற்கான விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் ஏப்ரல் 21 வரை விண்ணப்பிக்கக் கோரியுள்ளது. இதற்கான தேர்வு மே 12ஆம் தேதி என தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

இரு தேர்வுகளும் ஒரே நாளில் வருவதால், எம்.பி.,பி.எஸ். படித்து முடித்துவிட்டு அரசு வேலைவாய்ப்புக்கு காத்திருப்போர் வேலைக்கு செல்வதற்கான தேர்வை எழுதுவதா

அல்லது உயர்படிப்பு படிப்பதற்கான நுழைவுத் தேர்வை எழுதுவதா எனும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். ஏதேனும் ஒரு வாய்ப்பை மட்டுமே தேர்வு செய்யும் இக்கட்டான நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இரு தேர்வுகளுக்கும் விண்ணப்பத்து காத்திருக்கும் மருத்துவர் ஒருவரிடம் கேட்டபோது, வேலைவாய்ப்புத் தேர்வை எழுதலாம் என முடிவு செய்துவிட்டால், உயர்படிப்புக்கான நுழைவுத் தேர்வு எழுத இன்னும் ஓராண்டு காத்திருக்கும் நிலை ஏற்படும். எனவே தமிழக அரசு ஓரிரு நாள்கள் தள்ளி இத்தேர்வை நடத்துவதன் மூலம் இரு தேர்வுகளையும் எம்.பி.பி.எஸ். படித்து முடித்தவர்கள் எழுத முடியும்

என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.