கும்பகோணம் அருகே முன்விரோதம் காரணமாக தந்தை, மகன் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.
கும்பகோணம் அருகேயுள்ள நாதன்கோவில் பிரதான சாலையைச் சேர்ந்தவர் சேட்டுமகன் ஆனந்தன் (55). சைக்கிளில் வெங்காய வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி கோமதி. இவர்களது மகன் ஜெகதீஸ்வரன் (24) பெயிண்டர்.
இவர்களது பக்கத்து வீட்டில் முத்து மகன் அம்பிகாபதி வசித்து வருகிறார். ஆனந்தன் மற்றும் அம்பிகாபதி குடும்பத்தினருக்கும் இடையே இடப்பிரச்னை காரணமாக முன்விரோதம் இருந்து வந்ததாம்.
இந்நிலையில் சனிக்கிழமை இரு குடும்பத்தினருக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் அம்பிகாபதி மற்றும் அவரது சகோதரர்கள் நந்தகுமார், அய்யப்பன், தாய் சுலோச்சனா, நண்பர்கள் மோகன், ராஜ்குமார், கந்தன் உள்ளிட்ட 8 பேர் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் ஆனந்தனையும், அவரது மகன் ஜெகதீஸ்வரனையும் வெட்டினர்.
இதில் பலத்த காயமடைந்த தந்தை, மகன் இருவரும் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் தஞ்சை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு ஞாயிற்றுக்கிழமை காலை ஜெகதீஸ்வரன், ஆனந்தன் இருவரும் உயிரிழந்தனர்.
இந்த இரட்டைக் கொலை குறித்து ஆனந்தன் மகள் ஓவியா பட்டீஸ்வரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸார் வழக்குப்பதிந்து 8பேரை தேடி வருகின்றனர்.
பாபநாசம் டி.எஸ்.பி. சீனிவாசன், கும்பகோணம் டி.எஸ். பி. சிலம்பரசன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

100% வாக்குப் பதிவு: கோவையில் இந்திய துணை தேர்தல் ஆணையர் ஆய்வுக் கூட்டம்

கேவிஎன் நிறுவனத்திற்காக மீண்டும் நடிக்கும் விஜய்?

வருமான வரி- சென்னை உயர்நீதிமன்றத்தில் விஜய் மேல்முறையீடு

தமிழில் வெளியாகும் வாழ - 2!
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

