ஆண்டிபட்டி அருகே மறவபட்டி முத்தாலம்மன் கோயில் திருவிழாவில் விநோதமான முறையில் துடைப்பத்தால் அடிக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
மறவபட்டி முத்தாலம்மன் கோயில் திருவிழா கடந்த திங்கள்கிழமை துவங்கியது. முதல் நாள் பொங்கல் வழிபாடும், மறுநாள் முளைப்பாரி ஊர்வலமும் நடைபெற்றது. மூன்றாம் நாளான புதன்கிழமை அந்த கிராமத்தில் உள்ள மாமன், மைத்துனர் முறையில் உள்ளவர்கள் மீது துடைப்பத்தால் அடிக்கும் விநோத நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியின் போது, தெருவில் உள்ள சாக்கடையில் புரண்டும், சகதியில் துடைப்பத்தை தோய்த்தும் அடித்துக் கொண்டனர். மேலும் சிலர், சாக்கடையில் படுத்துக்கொண்டு தங்களது உறவினர்களிடம் துடைப்பத்தால் அடிவாங்கிக் கொண்டனர். இது குறித்து, இக்கிராமத்தைச் சேர்ந்தவர் கூறுகையில், இத்திருவிழாவில் இப்பகுதியைச் சேர்ந்த உறவினர்கள் அனைவரும் கலந்து கொள்கின்றனர். இதில், துடைப்பத்தால் அடித்துக் கொள்வதால் அவர்களுக்கிடையே மீண்டும் உறவு வளரும். மேலும், கண் திருஷ்டி மற்றும் பில்லி, சூனியம் நீங்கி தோஷங்கள் விலகும். இதில், மாமன், மைத்துனர் இடையே மட்டும் அடித்துக் கொள்வதாகக் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வருமான வரி- சென்னை உயர்நீதிமன்றத்தில் விஜய் மேல்முறையீடு

தமிழில் வெளியாகும் வாழ - 2!

7 ஆண்டுகளுக்குப் பின்.. இந்தியாவில் நங்கூரமிட்ட ஈரானிய எண்ணெய் கப்பல்கள்

நெல் ஊக்கத்தொகை: முதல்வர் ஸ்டாலின் கேட்ட கடிதத்தை வெளியிட்ட நிர்மலா சீதாராமன்!
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

