குற்றாலம் அருவிகளில் புதன்கிழமை பிற்பகலில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக புதன்கிழமை குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.
குற்றாலம் பகுதியில் புதன்கிழமை காலை முதல் மேகமூட்டத்துடன், அவ்வப்போது சாரல் மழையும் தொடர்ந்து பெய்து வந்தது. செவ்வாய்க்கிழமை பிற்பகல் முதல் குற்றாலம் மற்றும் ஐந்தருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டு புதன்கிழமை காலை முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் புதன்கிழமை பகல் 1 மணியளவில் பேரருவியில் பாதுகாப்பு வளைவைத் தாண்டி நடைபாலம் வரையிலும் ஆக்ரோஷமாக தண்ணீர் கொட்டியது. பழைய குற்றாலத்தில் நடப்பாண்டு இரண்டாவது முறையாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அருவிக்குச் செல்லும் நடைபாதை வழியாக தண்ணீர் பாய்ந்தோடியது.
இதனால் அங்கும் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. ஐந்தருவியிலும் தண்ணீர் அதிகளவில் கொட்டியதால் அங்கும் தடை விதிக்கப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் சிற்றருவி மற்றும் புலியருவியில் குளித்து மகிழ்ந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டெல்டா கடலோரப் பகுதி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
கோபி நயினார் இயக்கத்தில் ராதிகா... காலனி - முதல்பார்வை போஸ்டர் வெளியீடு!

ரூபாய் மதிப்பு சரிவு: 1 டாலர் - ரூ. 93.32! 49 காசுகள் சரிவு!

அர்த்தமில்லாமல் பேசும் உதயநிதி தமிழிசை சௌந்தரராஜன் | BJP | DMK
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


