சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

கிரானைட் கற்கள் சரிந்து இருவர் சாவு

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே சனிக்கிழமை இரவு கிரானைட் கற்கள் சரிந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்தனர்.

Updated On :22 ஜூலை 2013, 3:27 am IST

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே சனிக்கிழமை இரவு கிரானைட் கற்கள் சரிந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்தனர்.

கும்பகோணம் அருகேயுள்ள திருவிடைமருதூர் பகுதி கொடியாலம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராமதாஸ் (36). இவர் அதே கிராமத்தில் புதிதாக நிலம் வாங்கி வீடு கட்டி வந்தார்.

தற்போது அவரது வீட்டில் கிரானைட் கற்கள் பதிக்கும் பணி நடைபெற்று வந்தது. சனிக்கிழமை இரவு லாரியில் இருந்த கிரானைட் கற்களை அதே பகுதியைச் சேர்ந்த தொழிலாளி சேகருடன் (56) சேர்ந்து கீழே இறக்கும் பணியில் ராமதாஸ் ஈடுபட்டிருந்தார்.

அப்போது, திடீரென கிரானைட் கற்கள் சரிந்து ராமதாஸ், சேகர் ஆகியோர் மேல் விழுந்தது. இதில் 2 பேரும் கிரானைட் கற்களுக்கு இடையே சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பந்தநல்லூர் போலீஸôர் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.