நாகை, காரைக்கால் மாவட்ட மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்ததைக் கண்டித்து நாகை வட்ட மீனவக் கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் வியாழக்கிழமை முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற நாகை மாவட்ட மீனவர்கள் 36 பேரும், காரைக்கால் மாவட்டத்திலிருந்து 4 விசைப் படகுகளில் சென்ற 29 மீனவர்களும் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
தகவலறிந்த நாகை நம்பியார் நகர், கீச்சாங்குப்பம், அக்கரைப்பேட்டை ஆகிய மீனவக் கிராமங்களைச் சேர்ந்தவர்கள் தன்னெழுச்சியாக வியாழக்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், நாகை அக்கரைப்பேட்டையில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற நாகை வட்ட மீனவக் கிராமப் பஞ்சாயத்தார் ஆலோசனைக் கூட்டத்தில் நாகூர் ஆர்யநாட்டுத் தெரு உள்ளிட்ட மீனவக் கிராமப் பஞ்சாயத்தார் கலந்து கொண்டனர். இதில் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை மேற்கொள்ளத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் 74 பேரை இலங்கைக் கடற்படையினர் புதன்கிழமை மாலை பிடித்து கைது நடவடிக்கை இல்லாமல், எச்சரித்து அனுப்பியுள்ளதாக வியாழக்கிழமை மாலை உறுதி செய்யப்படாத தகவல் வெளியானது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மாணவனே, மாணவியே! நீ தலைவன் ஆகணும்!

ஃபிஃபா உலகக் கோப்பை: 7 கோல்கள் அடித்து ஜெர்மனி அபார வெற்றி!

லவ் ஓ லவ் திரைப்படத்தின் டீசர்!

புதிய முகங்களுக்கு வாய்ப்பு: தில்லி பாஜகவில் வரவிருக்கும் மாற்றங்கள்!
விடியோக்கள்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கு பகுதி பசுமையாக மாற்றப்படும்: அமைச்சர் சம்பத் குமார் | TVK

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி


