ஆடிட்டர் ரமேஷ் கொலைக் குற்றவாளிகளைக் கண்டறிய தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்ட, மாநகரப் போலீஸில் உள்ள சிறந்த புலனாய்வுத் திறன் மிக்க அதிகாரிகளைத் தேர்வு செய்து தனிப்படை அமைத்து விசாரிக்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
கடந்த 19-ஆம் தேதி சேலத்தில் பாரதிய ஜனதா கட்சி மாநில பொதுச் செயலாளர் ரமேஷும், ஒரு மாதத்துக்கு முன், வேலூரில் இந்து முன்னணி மாநிலச் செயலாளர் வெள்ளையப்பனும் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.
இக்கொலைச் சம்பவங்கள் குறித்து விசாரிக்க முதல்வர் உத்தரவின்படி, சி.பி.சி.ஐ.டி. சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஆடிட்டர் ரமேஷ் கொலை செய்யப்பட்டு இரண்டு வாரங்கள் ஆகிவிட்ட நிலையில், தமிழகம் முழுவதும் சந்தேகிக்கப்படும் பகுதிகளில் போலீஸôர் கண்காணித்து, ரகசிய விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பழைய குற்றவாளிகளிடமும் விசாரணை நடத்தப்படுகிறது.
இக் கொலைகளைப் பொறுத்த வரை யாரும் எதிர்பார்க்காத வகையில் பா.ஜ.க.வின் அழுத்தம் கடுமையாக உள்ளது. அக் கட்சியின் தேசியத் தலைவர் முதற்கொண்டு அனைத்துத் தலைவர்களும் உற்றுநோக்கும் விஷயமாக உள்ளது. சி.பி.சி.ஐ.டி. போலீஸôரும் இதில் சிறப்புக் கவனம் செலுத்தி விசாரித்து வருகின்றனர்.
இருப்பினும், இந்த வழக்கில் உருப்படியான பிடிப்பு எதுவும் போலீஸôருக்குக் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந் நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில், குற்ற வழக்குகளில் சிறந்த புலனாய்வு மற்றும் துப்பறியும் திறன் கொண்ட ஆய்வாளர்களைத் தேர்வு செய்து தனிப்படை அமைத்து விசாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
÷இதற்காக, கோவை மாநகரக் காவல் எல்லைக்கு உள்பட்ட சாயிபாபா காலனி சட்டம்-ஒழுங்கு ஆய்வாளர் சந்திரமோகன், மாவட்டக் குற்றப்பிரிவு ஆய்வாளர் பாலமுருகன் ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள், சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகளுடன் சேர்ந்து தனிப்படையாக விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
÷குறிப்பாக, கொலை நடந்த நேரத்திலிருந்து அரை மணி நேரம் முன்பாகவும், பின்பாகவும் அப் பகுதி முழுவதும் செயல்பாட்டில் இருந்த செல்ஃபோன் எண்களைச் சேகரித்து, அதிகம் பயன்படுத்தப்பட்ட மற்றும் சந்தேகிக்கும் எண்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வந்தே மாதரத்தை எதிர்ப்பவர்கள் நாட்டை விட்டு வெளியேறுங்கள்!
ஆர்சிபி சூப்பர் தொடக்கம்... மும்பைக்கு 241 ரன்கள் இலக்கு!
குரானை காலால் மிதித்த விடியோ வைரல்: 2 பெண்கள் கைது!
ஏகே - 64 இணை தயாரிப்பாளராக அஜித்?
வீடியோக்கள்

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு


