/

மேட்டூர் கிழக்கு- மேற்குக் கரை கால்வாய்கள் இன்று திறப்பு

மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு மற்றும் மேற்குக் கரை கால்வாய்களில் இருந்து வெள்ளிக்கிழமைமுதல் (ஆகஸ்ட் 2) தண்ணீர் திறந்துவிட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

Updated On :1 ஆகஸ்ட் 2013, 11:34 pm

மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு மற்றும் மேற்குக் கரை கால்வாய்களில் இருந்து வெள்ளிக்கிழமைமுதல் (ஆகஸ்ட் 2) தண்ணீர் திறந்துவிட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்பு:

மேட்டூர் அணையில் இருந்து மேட்டூர் கிழக்கு மற்றும் மேற்குக் கரை கால்வாய் பாசனத்துக்காக தண்ணீர் திறந்துவிடும்படி சேலம், ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களின் விவசாயிகளிடம் இருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. இதையேற்று, மேட்டூர் கிழக்கு மற்றும் மேற்குக் கரை கால்வாய்களில் நடப்பாண்டு பாசனத்துக்காக வெள்ளிக்கிழமைமுதல் (ஆகஸ்ட் 2) தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டுள்ளேன்.

இதனால், ஈரோடு மாவட்டத்தில் 17 ஆயிரத்து 230 ஏக்கர் நிலங்களும், சேலம் மாவட்டத்தில் 16 ஆயிரத்து 443 நிலங்களும், நாமக்கல் மாவட்டத்தில் 11 ஆயிரத்து 327 ஏக்கர் நிலங்களும் ஆக மொத்தம் 45 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று முதல்வர் ஜெயலலிதா தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.