திருவண்ணாமலையில் ரூ.130 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய அரசு மருத்துவக் கல்லூரியை தமிழக முதல்வர் ஜெயலலிதா வியாழக்கிழமை சென்னையில் இருந்தபடி காணொலி மூலம் திறந்துவைக்கிறார்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சுமார் 35 ஏக்கர் பரப்பளவில் இக் கல்லூரி கட்டப்பட்டு வருகிறது. முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகளை நடத்தத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் முடிவடைந்துள்ளன. மாணவ-மாணவியர்களுக்கான விடுதி வசதிகளும் தயார் நிலையில் உள்ளன.
மாணவர் சேர்க்கை: மொத்தமுள்ள 100 எம்.பி.பி.எஸ். இடங்களில் தமிழக ஒதுக்கீடான 85 இடங்களில் மாணவ-மாணவியர் கலந்தாய்வு மூலம் சேர்க்கப்பட்டுள்ளனர். எனவே, மருத்துவக் கல்லூரியைத் திறந்து வகுப்புகளை நடத்தும் பணியில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டு வந்தது.
இன்று திறப்பு: அதன்படி, மருத்துவக் கல்லூரி திறப்பு விழா வியாழக்கிழமை காலை நடைபெறுகிறது. மருத்துவக் கல்லூரியை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலி மூலம் தமிழக முதல்வர் ஜெயலலிதா திறந்து வைக்கிறார்.
இந் நிகழ்ச்சியில், தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன், சுகாதாரத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கஞ்சா விற்றதாக துணிக்கடை ஊழியா் கைது
ஜாா்க்கண்ட்: மின்னல் தாக்கி பெண்கள், சிறாா் உள்பட 8 போ் உயிரிழப்பு

மக்கள் விரோதச் செயல்களை அனுமதிக்கமாட்டோம்! அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா்

கல்வியும், மருத்துவமும் மாநிலப் பட்டியலுக்கு வர வேண்டும்! அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


