சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

வானமே மேற்கூரையானது: ஆபத்தான நிலையில் பயணிகள் நிழற்குடை

திருக்கோவிலூர் அருகே, மிகவும் பழுதடைந்து ஆபத்தான நிலையில் காணப்படும் நிழற்குடையை சீரமைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News image
Updated On :1 செப்டம்பர் 2013, 10:12 pm

திருக்கோவிலூர் அருகே, மிகவும் பழுதடைந்து ஆபத்தான நிலையில் காணப்படும் நிழற்குடையை சீரமைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருக்கோவிலூர்-கடலூர் பிரதானச் சாலையில் அமைந்துள்ள எல்ராம்பட்டு பஸ் நிறுத்தத்தில், 15 ஆண்டுகளுக்கு முன் பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டது.

இப்பகுதி மக்களுக்கு மிகவும் பயனாக இருந்து வரும் இந்த நிழற்குடை 3 ஆண்டுகளுக்கும் மேலாக பழுதடைந்த நிலையில் உள்ளது.

குறிப்பாக அதன் மேற்கூரை பாதி அளவுக்கு இடிந்து விழுந்துள்ளது. மீதமுள்ள மேற்கூரை எப்போது இடிந்து விழுமோ என்ற அச்சத்தில் பயணிகள் இந்த நிழற்குடையை பயன்படுத்துவதில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என்கின்றனர் பயணிகள்.

இனியாவது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இந்த நிழற்குடையை சீரமைக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்துகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.