தில்லியில் அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்ய உத்தரவு: முதல்வர்16 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் எஸ்ஐஆர்! மே 30 முதல் தொடக்கம்!திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிப்பு!அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்பு!
/

பா.ம.க.வினர் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

பாட்டாளி மக்கள் கட்சி பிரமுகர்கள் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

Updated On :13 மே 2013, 3:38 am IST

பாட்டாளி மக்கள் கட்சி பிரமுகர்கள் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த குத்தாம்பூண்டியைச் சேர்ந்தவர் சோமசுந்தரம் மகன் திருமாறன் (22). பா.ம.க. பிரமுகர். பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கைதானதைத் தொடர்ந்து கடந்த வாரம் அரசு பஸ்ûஸ குத்தாம்பூண்டி பகுதியில் மர்ம நபர்கள் கல்வீசி தாக்கினர். இந்த வழக்கில் திருமாறனைப் போலீஸார் கைது செய்தனர்.

இந்நிலையில் திருமாறனை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்டக் காவல் கண்காணிப்பார் மனோகரன் பரிந்துரை செய்தார். இதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் வா.சம்பத் குண்டர் தடுப்புச் சட்டத்தில் திருமாறனைச் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

பண்ருட்டி நகரச் செயலர் குண்டர் சட்டத்தில் கைது: பண்ருட்டி, மே 12: பண்ருட்டி நகர பாமக செயலர் நந்தன் என்கிற நந்தகோபால் (40) குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

பாமக நகரச் செயலராக உள்ள இவர் மீது பண்ருட்டி காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் கைது தொடர்பாக நடந்த சாலை மறியல் உள்ளிட்ட சம்பவங்களில் பண்ருட்டி போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மாவட்டக் கண்காணிப்பாளர் ராதிகா பரிந்துரையின்கீழ் இதற்கான உத்தரவை ஆட்சியர் கிர்லோஷ்குமார் பிறப்பித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.