மே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்புகேரள சட்டப்பேரவையின் அமைச்சர்கள் பட்டியலை வெளியிட்டார் முதல்வராக நியமிக்கப்பட்டுள்ள வி.டி. சதீசன்மாஸ்கோவில் ட்ரோன் தாக்குதல்: இந்தியர் ஒருவர் பலி, 3 பேர் படுகாயம் திரைப்படத் தயாரிப்பாளர் கே. ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை தமிழகத்தில் மே 23 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்
/

லாரி மீது கார் மோதல்: இரு பொறியாளர்கள் சாவு

விழுப்புரம் அருகே சாலையில் பழுதாகி நின்றிருந்த லாரி மீது கார் மோதியதில் சென்னையைச் சேர்ந்த பொறியாளர்கள் இருவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர்.

Updated On :13 மே 2013, 3:27 am IST

விழுப்புரம் அருகே சாலையில் பழுதாகி நின்றிருந்த லாரி மீது கார் மோதியதில் சென்னையைச் சேர்ந்த பொறியாளர்கள் இருவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனர்.

சென்னையில் இருந்து திருச்சி நோக்கி கன்டெய்னர் லாரி ஒன்று சிமென்ட் மூட்டைகளை ஏற்றிச் சென்றது. பிடாகம் அருகே செல்லும் போது லாரியின் முன்புற டயர் பஞ்சர் ஆனது. இதனைத் தொடர்ந்து டிரைவரும், கிளீனரும் லாரியை நிறுத்திவிட்டு கீழே இறங்கி பழுதை சரி செய்து கொண்டிருந்தனர்.

அப்போது சென்னையில் இருந்து திருச்சி நோக்கிச் சென்ற கார் ஒன்று நின்றிருந்த கன்டெய்னர் லாரி மீது மோதியது. இதில் காரில் சென்ற சென்னையைச் சேர்ந்த கார் நிறுவனத்தில் பொறியாளராக வேலை பார்க்கும் கோட்டூர்புரத்தைச் சேர்ந்த பரணிதரன்(32), சண்முகம்(32) ஆகியோர் அதே இடத்தில் உயிரிழந்தனர்.

இது குறித்து விழுப்புரம் தாலுக்கா போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.