இதே போன்று நவம்பர் 10-ஆம் தேதி புதூர் கிராமத்தில் விவசாயியின் வீட்டின் பூட்டை உடைத்து 25 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. நவம்பர் 18-ம் தேதி அலமாதி பகுதியைச் சேர்ந்த ஜெகன்மோகன் என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து 15 சவரன் நகை, ரு.2 லட்சமும், நவ.19-ஆம் தேதி மருதுபாண்டியர் நகரில் வசித்து வரும் ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டர் சுப்ரமணி வீட்டில் 12 சவரன் நகை, ரூ.25ஆயிரமும், நவ. 27-ஆம் தேதி ஜனப்பச்சத்திரம் பகுதியில் உள்ள உணவகத்தில் உணவருந்த சென்ற ஆந்திர மாநில அடகு கடை வியாபாரியின் கார் கண்ணாடியை உடைத்து 37 சவரன் நகை, ரூ.1 லட்சம் என்று கொள்ளைச் சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்தேறியது. தொடர் கொள்ளை சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளை இதுவரை சோழவரம் போலீஸார் கைது செய்யவில்லை.