தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

கடலூரில் 2 வீடுகளை உடைத்து ரூ.2 லட்சம் மதிப்பிலான நகை, பணம் கொள்ளை

கடலூரில் அடுத்தடுத்து 2 வீடுகளில் நடந்த கொள்ளை சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரூ.2 லட்சம் மதிப்பிலான நகைகள் மற்றும் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து புதுநகர் போலீசார்

News image
Updated On :11 ஆகஸ்ட் 2014, 12:22 pm

ஜி.சுந்தரராஜன்

கடலூரில் அடுத்தடுத்து 2 வீடுகளில் நடந்த கொள்ளை சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரூ.2 லட்சம் மதிப்பிலான நகைகள் மற்றும் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து புதுநகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர் மஞ்சக்குப்பம் சேகர் நகரை சேர்ந்தவர் பெருமாள் (46). நடுவீரப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்தாளுநராக பணியாற்றி வருகிறார். ஞாயிற்றுக்கிழமை வழக்கம்போல் இவர் வீட்டில் குடும்பத்துடன் தூங்கிக் கொண்டிருந்தார். திங்கள்கிழமை காலை எழுந்து பார்த்தபோது, வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டு அறையில் இருந்த பீரோவிலிருந்த ரூபாய் 10 ஆயிரம் ரொக்கம், ஒன்றரை பவுன் நகைகளை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இதே போன்று கடலூர் வள்ளியம்மை நகரில் வசிப்பவர் ஞானசேகரன். இவர் ஒய்வுபெற்ற துணை வட்டார வளர்ச்சி அலுவலராவார். இவரது மனைவி பெளாம்பாள் செவிலியர் மேற்பார்வையாளராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். இருவரும் வீட்டில் ஒரு அறையில் தூங்கிக் கொண்டிருந்தபோது, வீட்டின் ஜன்னல் கதவை உடைத்து மர்மஆசாமிகள் உள்ளே புகுந்து 8 பவுன் நகைகள் மற்றும் ரூ.5 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளையடித்து பின்புறக்கதவை திறந்து சென்றுள்ளனர். கடலூரில் அடுத்தடுத்து இரு வீடுகளில் நடந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து புதுநகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.