எனவே கோயிலில் உள்ள மற்ற சந்நிதிகளுக்கும் இந்த பாதிப்பு ஏற்படாமல் இருக்க கோயிலை சுற்றியும், கோயிலுக்கு வெளியேயும் உள்ள கிணறுகளில் நீர் கிடைக்க மூன்றாவது பிரகாரத்தில் உள்ள கருங்கல் தரைகளை அகற்றி கடல்கரையோரம் கொண்டு போட வேண்டும். மேலும் சுமார் 40 ஆண்டுகளாக மூன்றாவது பிரகாரத்தில் மழைநீர் இல்லாததால், மண் ஆற்றி போய் இருக்கும், எனவே அந்த மண்ணை சுமார் 6 அடிக்கு எடுத்து அப்புறப்படுத்தி, ஆற்று மண்ணையோ, கடல் மண்ணையோ போட வேண்டும். பின்னர் ஏரி நீரை குழாய் மூலம் மூன்றாவது பிரகாரத்தில் அதிகளவில் விட வேண்டும். அப்போதுதான் நீர்மட்டம் உயரும் என கடிதத்தில் கு.கைலாச சங்கர தீட்சிதர் தெரிவித்துள்ளார்.