திருச்சுழியில் அரசு டாஸ்மாக் மதுபான கடை தொடங்குவதற்கு பொதுமக்கள் ஆட்சேபனை தெரிவித்து ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
இது குறித்து திருச்சுழி கிராமம் ராமசாமி தெருவைச் சேர்ந்த பொதுமக்கள் வெள்ளிக்கிழமை ஆட்சியரிடம் நேரில் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: திருச்சுழியில் ராமசாமி தெருவில் தனியார் மொபைல் கடைக்கு அருகே புதிதாக அரசு டாஸ்மாக் கடை திறக்க இருக்கின்றனர். ஏற்கனவே இத்தெருவில் 3 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது.
இந்த தெரு குறுகிய தெருவாக இருக்கிறது. இதுவழியாகத்தான் மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்கும், பெண்கள் குடிநீர் குழாய்களில் தண்ணீர் எடுக்கவும் செல்கின்றனர். அதேபோல், தனியார் அரசு மருத்துவமனைகள், அரசு மற்றும் தனியார் மேல்நிலைப்பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன.
இக்குறிப்பிட்ட தெருவில் டாஸ்மாக் கடை திறந்தால் குடிகாரர்கள் தெருக்களில் நின்று கொள்ளும் சூழ்நிலையிருக்கிறது. அதனால், இப்பகுதியில் தேவையில்லாத சட்ட ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படுவதோடு, அன்றாட நடவடிக்கைகளும் பாதிக்கப்படும் சூழ்நிலை இருக்கிறது. இதுபோன்ற காரணங்களால் டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆட்சியரிடம் நேரில் அளித்த மனுவில் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

