அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்வதாக கணவர் குடும்பத்தார் மீது மனைவி புகார்

விருதுநகர் அருகே வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்வதாக மனைவி புகாரின் பேரில் கணவர் உள்பட குடும்பத்தார் 9 பேர் மீது திங்கள்கிழமை வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

Updated On :10 ஆகஸ்ட் 2015, 3:19 pm

விருதுநகர் அருகே வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்வதாக மனைவி புகாரின் பேரில் கணவர் உள்பட குடும்பத்தார் 9 பேர் மீது திங்கள்கிழமை வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

விருதுநகர் சூலக்கரை வ.உ.சி தெருவைச் சேர்ந்த சுப்பிரமணியத்தின் மகள் பாண்டிச்செல்வி(30). அதே பகுதியைச் சேர்ந்த வேலுச்சாமியின் மகன் விஜயமுனியப்பன்(35) என்பவருக்கும் இடையே கடந்த 2006ல் திருமணம் நடைபெற்றதாம். அப்போது, ரூ.20 ஆயிரம் ரொக்கம், 20 சவரன் நகை மற்றும் ரூ.2 லட்சம் மதிப்பிலான சீர்வரிசை பொருள்கள் ஆகியவை வழங்கப்பட்டதாம். இவர்களுக்கு ஆண்குழந்தையும் உள்ளது.

இந்நிலையில், இவரது கணவர் திருமணம் ஆன நாளிலிருந்து எவ்வித வேலைக்கும் செல்லாமல் மது குடித்து வந்து தகராறு செய்வாராம். மேலும், சொந்தமாக கார் வாங்கப்போவதாக கூறி கூடுதலாக வரதட்சணையாக பணம், நகை கொண்டு வந்தால் வாழ முடியும் எனக் கேட்டு சித்ரவதை செய்துள்ளார். இதற்கு அவரது குடும்பத்தாரும் உடந்தையாக இருந்துள்ளனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த பாண்டிச்செல்வி விருதுநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கணவர் மற்றும் குடும்பத்தார் மீது புகார் செய்தார். அதன் அடிப்படையில் கணவர் விஜயமுனியப்பன், தந்தை வேலுச்சா்மி, தாயார் முனியம்மாள், சகோதரரி விஜயலட்சுமி-இளங்கோவன், தங்கை மோகனா- ஞாபகதுரை, தங்கை பாரதி-கனகவேல் உள்ளிட்டோர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.