அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை களைவது தொடபான கருத்தரங்கம்

குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை களைவது தொடர்பாக இன்று நடந்த மாநில அளவிலான கருத்தரங்கில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Updated On :30 ஆகஸ்ட் 2015, 3:15 pm

குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை களைவது தொடர்பாக இன்று நடந்த மாநில அளவிலான கருத்தரங்கில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

விருதுநகர் தனியார் அரங்கத்தில் தொண்டு நிறுவனங்கள் சார்பில் நடந்த கருத்தரங்கிற்கு ஸ்பீச் தொண்டு நிறுவன இயக்குநர் எர்ஸ்கின் தலைமை வகித்தார். தகவல் தொடர்பாளர் லிபி ஜோப்சன், கண்காணிப்பு அலுவலர் சிஜிமேத்யூ ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, தேனி, புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

ஐக்கிய சபை வேண்டுகோளின்படி அடுத்துவரும் 15 ஆண்டுகளில் குழந்தைகள் அனைவரும் அவர்களுக்கு எதிரான வன்முறைகளில் இருந்து விடுபட வேண்டும்.  அதன் அடிப்படையில் இக்கருத்தரங்கில் மாணவ, மாணவிகள் குழுக்கள் அமைத்து  விவாதம் செய்து கருத்தரங்கில் தீர்மானங்களை சமர்பித்தனர்.

அதில், குழந்தைகளின் கருத்துக்களை மதிக்க வேண்டும். மாற்றுத்திறனாளி குழந்தைகள் மற்றும் எய்ட்ஸ் போன்றவைகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பாதுகாக்கவும் மருத்துவ வசதி செய்வதற்கு தனி விடுதிகள் அமைக்க வேண்டும். குழந்தை தொழிலாளர் முறையை ஒழித்து, வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறுமிகளின் திருமணத்தை தடுக்கவும் வேண்டும். குழந்தைகள் உரிமை பாதுகாப்பு குறித்து பள்ளிகள் தோறும் ஆலோசனை மையங்கள் உருவாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.