மேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புஇலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்தமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைவாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

மழை, வெள்ளம்: தமிழகத்தில் 269 பேர் பலி என ராஜ்நாத் சிங் மக்களவையில் தகவல்

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் இதுவரை 269 பேர் உயிர் இழந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் இன்று தாக்கல் செய்த அறிக்கையில் கூறியுள்ளார்.

News image
Updated On :3 டிசம்பர் 2015, 3:34 pm

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் இதுவரை 269 பேர் உயிர் இழந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் இன்று தாக்கல் செய்த அறிக்கையில் கூறியுள்ளார்.

தமிழகத்தில் மழை, வெள்ளம் காரணமாக பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மழை, வெள்ளத்தில் சிக்கி இதுவரை 269 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், மழை வெள்ளத்தால் இதுவரை ஆந்திர பிரதேசத்தில் 54 பேர் மரணமடைந்துள்ளனர்.

தமிழக வெள்ள நிலவரம் மிக கவலைக்குரியதாகவே உள்ளது. இதில் இரு வேறு கருத்து இல்லை என்ற ராஜ்நாத் சிங், சென்னை தற்போது தனித் தீவாக காட்சி அளிக்கிறது என்றார். சென்னையை இணைக்கும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டுள்ளது.

வெள்ளம் பாதித்த பகுதிகளில் மத்திய அரசு சார்பில் பல்வேறு நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இன்னும் தேவையான உதவிகளை வழங்குவதற்கு அரசு தயாராகவே உள்ளது.

இந்த விவாதத்தில் பேசிய மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, வெள்ள நிவாரணத்துக்கு தமிழக அரசு கேட்கும் அனைத்து நிவாரண உதவியையும் வழங்க வேண்டும் என்றார்.

இதுபோன்ற தேசிய பேரிடர்களை சந்திப்பதற்காக ஒரு தனித் துறையை ஏற்படுத்த வேண்டும் என்றார் சமாஜ்வாதி தலைவர் முலயாம் சிங் யாதவ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.