இந்நிலையில் திருமலாபுரத்தைச் சேர்ந்த முத்துராஜ், சின்னராஜ் ஆகியோர், பாட்டக்குளத்தைச் சேர்ந்த ப.பிரகாஷ், ரா.விக்னேஷ், ஜெ.சந்துரு, க.முத்துக்கிருஷ்ணன், செ.அஜித்குமார், ரா.மனோஜ், ஜெ.துர்க்கையாண்டி ஆகியோரிடம் புதன்கிழமை ஏன், எங்கள் தரப்பு மாணவிகளை கேலி செய்கிறீர்கள் என்று கேட்டுள்ளனர். இதில் ஆத்திரமுற்ற இவர்கள், முத்துராஜையும், சின்னராஜையும் அடித்து சட்டையைக் கிழித்து சாதியைக் கூறி இழிவாகப் பேசியுள்ளார்கள். இது குறித்து திருமலாபுரம் ஊர்நாட்டாமை ஆ.செல்வராஜ் (47) கிருஷ்ணன்கோவில் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் பிரகாஷ் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.