விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் பி.டெக் முதலாண்டு படிக்கும் மாணவர்களுக்கு ஓராண்டு யோகா பட்டய வகுப்பு தொடக்க விழா துணை வேந்தர் ச.சரவணசங்கர் தலைமையில் நடைபெற்றது. பதிவாளர் வெ.வாசுதேவன் வரவேற்றார்.
பல்கலைக்கழகத்தின் டீன் அகடாமிக் தேவராஜ் பட்டய வகுப்பைத் தொடங்கி வைத்துப் பேசுகையில் கூறியதாவது: யோகா வகுப்பு, பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள குளிரூட்டப்பட்டுள்ள அறையில் தினமும் கலை 10 மணி முதல் 12 மணி வரை மற்றும் 2 மணி முதல் 4 மணி வரை கற்றுத் தரப்படுகிறது. மாணவர்களின் பாடதிட்ட நேரத்தில் இதற்கு நேரம் கொடுக்கப்பட்டுள்ளது.