28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் சமுதாய உறவின் முறையில் கோஷ்டி மோதல்: இருவர் காயம்: 12 பேர் கைது

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், பெருமாள்பட்டி நாடார் உறவின் முறையில் திங்கள்கிழமை தலைவர் கோஷ்டிக்கும் செயலர் கோஷ்டிக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இருவர் காயம் அடைந்தனர். இது தொடர்பாக இரு தரப்பையும் சேர்ந்த 12 பேரை போலீஸார் கைது செய்தனர்.

News image
Updated On :20 ஜூலை 2015, 3:36 pm

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், பெருமாள்பட்டி நாடார் உறவின் முறையில் திங்கள்கிழமை தலைவர் கோஷ்டிக்கும் செயலர் கோஷ்டிக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இருவர் காயம் அடைந்தனர். இது தொடர்பாக இரு தரப்பையும் சேர்ந்த 12 பேரை போலீஸார் கைது செய்தனர்.

பெருமாள்பட்டி நாடார் உறவின் முறை தலைவராக மா.மாயாண்டி என்பவரும், செயலாளராக ப.வேலவன் என்பவரும் உள்ளார்கள். இவர்கள் இருவரும் தனித்தனி கோஷ்டியாக செயல்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் திங்கள்கிழமை உறவின் முறை சமுதாய அலுவலகம் அருகே சிலர் ஒன்று கூடி ஊர் கணக்கு பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட தகாறில் தலைவர் கோஷ்டியைச் சேர்ந்த த.முத்துக்குமார் (42) என்பவரை எதிர் தரப்பினர், கட்டைகள் மற்றும் மர நாற்காலியை வைத்து தாக்கியதில் அவர் பலத்த காயம் அடைந்து ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து அவர் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து ப.வேலவன் (37), ஆ.ரமேஷ் (34), ச.முத்துக்குமார் (44), ச.ராமநாதன் (40), அ.நாகராஜன் (50), சி.பன்னீர்செல்வம் (39) ஆகியோரைக் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள த.முருகேசன், ஆ.முருகேசன், மா.செல்வராஜ் ஆகியோரைத் தேடி வருகிறார்கள்.

செயலாளர் தரப்பில் ஆ.ரமேஷ் (34) என்பவர் மோதலில் தனக்கு காயம் ஏற்பட்டதாய் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இவர் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து மா.மாயாண்டி (92), மா.சௌந்தரபாண்டியன் (58), சீ.செல்வராஜ் (39), கணேஷ்வேல் (29), விஜயகுமார் (28), ராமசாமி (35) ஆகியோரைக் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.