விருதுநகர் அருகே சாலையை கடந்து சென்ற மூதாட்டி மீது இருசக்கர வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
விருதுநகர் அருகே சேர்வைக்காரன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மருதன் என்பவரின் மனைவி ராமாயி(75). இவர் வியாழக்கிழமை சாலையை கடநது தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தாராம். அப்போது, மத்தியசேனையில் இருந்து வடமலாபுரம் நோக்கி வேகமாக சென்ற இருசக்கர வாகனம் மோதியது. இதில், பலத்த காயம் அடைந்த மூதாட்டியை உயிருக்கு ஆபத்தான நிலையில் சிவகாசி அரசு
மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு நள்ளிரவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது தொடர்பாக அவரது மகன் வீரணன் ஆமத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் வடமலாபுரம் அண்ணாகாலனியைச் சேர்ந்த மாரீஸ்வரன்(25) என்பவரை கைது செய்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

