பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 92.85! 29 காசுகள் உயர்வுஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

விவசாயியின் வயல்வெளியில் 7100 கிலோ மக்காச்சோளம் விற்பனை    

திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டாரத்திலுள்ள எம்.களத்தூர் கிராமத்தில் விவசாயி நிலத்தில் அறுவடை செய்யப்பட்டிருந்த மக்காச்சோளம் அப்பகுதியிலேயே விற்பனை செய்யப்பட்டு, உரியத் தொகை

News image
Updated On :2 மார்ச் 2015, 10:25 am

திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டாரத்திலுள்ள எம்.களத்தூர் கிராமத்தில் விவசாயி நிலத்தில் அறுவடை செய்யப்பட்டிருந்த மக்காச்சோளம் அப்பகுதியிலேயே விற்பனை செய்யப்பட்டு, உரியத் தொகை விவசாயிக்கு வழங்கப்பட்டது.

வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் மூலமாக, விவசாயிகள் ஆர்வலர் குழுவினரால் எம்.களத்தூர் கிராமத்தில் திங்கள்கிழமை விவசாயி கே.குமார் தன்னுடைய நிலத்தில் அறுவடை செய்து வைத்திருந்த 7100 கிலோ மக்காச்சோளத்தை வயல்வெளியிலேயே வளையப்பட்டியைச் சேர்ந்த வியாபாரி செந்தில்குமாருக்கு விற்பனை செய்தார்.

கிலோ ரூ.12-க்கு என்ற அளவில் விற்பனையான மக்காச்சோளத்துக்குரிய தொகையான ரூ. 85,200 உடனடியாக வழங்கப்பட்டது.இந்த நேரடி வியாபாரி -விவசாயி விற்பனை பரிமாற்றத்துக்கு வேளாண் வணிகத் துறையின் வேளாண் உதவி அலுவலர் தொட்டியம் சரவணக்குமார்,முசிறி வேளாண்மை அலுவலர் புஷ்பாசிவகுமார், ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர். எம்.களத்தூர் கிராமத்தில் அமைக்கப்பட்ட விவசாயிகள் ஆர்வலர் குழு அமைக்கப்பட்டு, குழு மூலம் முதன்முறையாக வயல்வெளியில் நேரடியாக மக்காச்சோளம் விற்பனை செய்யப்பட்டுள்ளது நல்ல பலனைத் தந்துள்ளது என்று திருச்சி வேளாண் வணிகத்  துணை இயக்குநர் இரா.சந்திரசேகரன் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.