தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

சோளிங்கர்: பிளஸ்2 படித்து விட்டு கிளினிக் நடத்திய போலி டாக்டர் கைது

பிளஸ் 2 படித்து விட்டு சோளிங்கரில் ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்த போலி டாக்டர் கைது செய்யப்பட்டார்.

News image
Updated On :7 நவம்பர் 2015, 12:03 pm

சீனிவாசன்

பிளஸ் 2 படித்து விட்டு சோளிங்கரில் ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்த போலி டாக்டர் கைது செய்யப்பட்டார்.

சோளிங்கரில் போலி டாக்டர்கள் கிளினிக் வைத்து சிகிச்சை அளிப்பதாக வேலூர் மாவட்ட மருத்துவ பணிகள் இணைஇயக்குனர் மணிமேகலைக்கு தகவல் கிடைத்து. அதன்பேரில் இணைஇயக்குனர் மணிமேகலை, சோளிங்கர்  அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் பாரதி ஆகியோர் சோளிங்கர் பஜாரில் உள்ள ஒரு கிளினிக்கில் சோதனை நடத்தினர்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த குமார்(44) என்பவர் பிளஸ்2 படித்து விட்டு நோயாளிகளுக்கு ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்து வந்தது தெரிந்தது.

இதையடுத்து அங்கிருந்த மருந்து மாத்திரைகள் ஊசிகள் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இது குறித்து இணை இயக்குனர் மருத்துவர் மணிமேகலை சோளிங்கர் காவல்நிலையத்தில் புகார் செய்தார்.அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜவ்வாது உசேன் வழக்கு பதிந்து போலி டாக்டர் குமாரை கைது செய்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.