ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் வீட்டை உடைத்து நகை பணம் திருட்டு

ஸ்ரீவில்லிபுத்தூரில் வீட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகிறார்கள்.

News image
Updated On :4 அக்டோபர் 2015, 10:49 am

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூரில் வீட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகிறார்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூர், வாழைக்குளம் தெருவைச் சேர்ந்தவர் கணேஷ்குமார் (35). இவர் பிஸ்கெட் டீலராக உள்ளார். இவரது மனைவியை சேத்தூரில் உள்ள அவரது பெற்றோர் வீட்டில் விட்டுவிட்டு, சனிக்கிழமை கணேஷ்குமார் திருச்செந்தூர் சென்றுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை வீட்டின் மேல் மாடியில் குடியிருப்போர் கீழ் தளத்தில் வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்து.

வீட்டினுள் இருந்த பீரோவை உடைத்து அதிலிருந்த 3 பவுன் நகைகள் மற்றும் ரூ.8 ஆயிரம் திருடு போயிருந்தது தெரியவந்தது.

இது குறித்து கணேஷ்குமார், ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.