மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபயணம்

விருதுநகரில் சாதி ஆணவக்கொலைகளை தடுக்க சட்டம் கொண்டு வருதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் இன்று நடைபயணம்

Updated On :9 அக்டோபர் 2015, 12:41 pm

விருதுநகரில் சாதி ஆணவக்கொலைகளை தடுக்க சட்டம் கொண்டு வருதல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் இன்று நடைபயணம் மேற்கொண்டனர்.

      தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் சார்பில் சாதி ஆணவக்கொலைகளை தடுக்க தனிச்சட்டம் கொண்டு வருதல், சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களுக்கு பாதுகாப்பு மற்றும் அரசு பணி வழங்குதல், தம்பதியினருக்கு குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.2 லட்சம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபயணம் நிகழ்ச்சி நடைபெற்றது.

    விருதுநகர் காந்திபுரம் வி.வி.ஆர்.சிலை முன்பு நடந்த நடைபயண நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழி்ப்பு முன்னணியின் மாவட்ட தலைவர் ஜி.முருகேசன் தலைமை வகித்தார். மதுரை தெற்கு சட்ப்பேரவை உறுப்பினர் ஆர்.அண்ணாத்துரை கலந்து கொண்டு நடைபயண நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    இந்த நடைபயணம் வி.வி.ஆர்.சிலை முன்பு தொடங்கி, தொடர்ந்து ரயில்வே பீடர் சாலை, ராமமூர்த்தி சாலை, அரசு மருத்துவமனை வழியாக பாண்டியன் நகரில் உள்ள ரோசல்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு முடிந்த நடைபயணத்தை சி.ஐ.டி.யு மாநில துணைப்பொதுச்செயலாளர் கருமலையான் நிறைவு செய்து வைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.