விஷம் குடித்து ஒருவர் தற்கொலை
ஸ்ரீவில்லிபுத்தூரில் விஷம் குடித்து ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.


ஸ்ரீவில்லிபுத்தூரில் விஷம் குடித்து ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.
ஸ்ரீவில்லிபுத்தூர், ராமகிருஷ்ணாபுரம் கீழத் தெருவைச் சேர்ந்தவர் சி.சிவராம் (50). இவரது மனைவி செல்வி (38). இருவருக்கும் 1993 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்று ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் பிள்ளைகள் உண்டு.
மது குடிக்கும் பழக்கம் உள்ள சிவராம், அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து தகராறு செய்து வந்துள்ளார். இதனை மனைவி கண்டித்துள்ளார். இதில் மன உளைச்சல் அடைந்த சிவராம், விஷால் நகரி கீழ்புறம் உள்ள இவர்களது பூர்வீக நிலத்தில் உள்ள சமாதியில் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து செல்வி, கிருஷ்ணன்கோவில் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...