சாமானிய குடும்பத்தில் பிறந்த ஒருவராலும் செயற்கரிய சாதனைகளைச் செய்து காட்ட முடியும் என்பதை உலகுக்கு உணர்த்திவரும், மகாத்மா காந்திக்கு பிறகு இந்தியத்துணைக் கண்டத்தில் இனம், மொழி, மதம், சாதி வேறுபாடுகள், உயந்தவர்- தாழ்ந்தவர், பணக்காரர்- ஏழை, படித்தவர்- பாமரர் போன்ற அத்தனை வேறுபாடுகளையும் கடந்து எந்த ஒரு பிரிவினராலும் கருத்து மாறுபாடின்றி நேசிக்கப்பட்ட, மதிக்கப்பட்ட மாமனிதராக வாழ்ந்த அப்துல்கலாமின் நினைவைப் போற்றும் வகையில் அவரைப்பற்றிய பல்வேறு அரிய தகவல்களைக் கொண்ட பெட்டகமாக வெளிவந்துள்ள சிறப்பு மலரை மாவட்டம் முழுதும் உள்ள பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் உள்பட அனைத்துத்தரப்பினரிடமும் கொண்டு சேர்க்க தன்னால் முடிந்ததை வாசகர் என்ற முறையில் செய்துள்ளதாக தெரிவித்தார் முன்னாள் பேராசிரியர் சா. விஸ்வநாதன்.