டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

அரசு நூலகங்களுக்கு தினமணி அப்துல்கலாம் சிறப்பு மலர்

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள  அரசு நூலகங்களுக்கு தினமணி சார்பில் வெளிடப்பட்டுள்ள முன்னாள் குடியரசுத்தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாமின் சிறப்பு மலர் புத்தகங்களை தினமணியின் தீவிர வாசகரும், புதுகை அரசு மன்னர் கல்லூரியின் வரலாற்றுத்துறை முன்னாள் பேராசிரியருமான சா. விஸ்வநாதன் நன்கொடையாக நூலக அலுவலரிடம் வழங்கினார்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 7:05 am

ஆா்.மோகன்ராம்

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள  அரசு நூலகங்களுக்கு தினமணி சார்பில் வெளிடப்பட்டுள்ள முன்னாள் குடியரசுத்தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாமின் சிறப்பு மலர் புத்தகங்களை தினமணியின் தீவிர வாசகரும், புதுகை அரசு மன்னர் கல்லூரியின் வரலாற்றுத்துறை முன்னாள் பேராசிரியருமான சா. விஸ்வநாதன் நன்கொடையாக நூலக அலுவலரிடம் வழங்கினார்.

சாமானிய குடும்பத்தில் பிறந்த ஒருவராலும் செயற்கரிய சாதனைகளைச் செய்து காட்ட முடியும் என்பதை உலகுக்கு உணர்த்திவரும், மகாத்மா காந்திக்கு பிறகு இந்தியத்துணைக் கண்டத்தில் இனம், மொழி, மதம், சாதி வேறுபாடுகள், உயந்தவர்- தாழ்ந்தவர், பணக்காரர்- ஏழை, படித்தவர்- பாமரர் போன்ற அத்தனை வேறுபாடுகளையும் கடந்து எந்த ஒரு பிரிவினராலும் கருத்து மாறுபாடின்றி நேசிக்கப்பட்ட, மதிக்கப்பட்ட மாமனிதராக வாழ்ந்த அப்துல்கலாமின் நினைவைப் போற்றும் வகையில் அவரைப்பற்றிய பல்வேறு அரிய தகவல்களைக் கொண்ட பெட்டகமாக வெளிவந்துள்ள சிறப்பு மலரை மாவட்டம் முழுதும் உள்ள பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் உள்பட அனைத்துத்தரப்பினரிடமும் கொண்டு சேர்க்க தன்னால் முடிந்ததை வாசகர் என்ற முறையில் செய்துள்ளதாக தெரிவித்தார் முன்னாள் பேராசிரியர் சா. விஸ்வநாதன்.

புதுக்கோட்டையிலுள்ள மாவட்ட மைய நூலகத்தில் மாவட்ட நூலகர் ஆர். செல்லாள் வழிகாட்டுதலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதுநிலை நூலகர் பா. முத்துவிடம் மாவட்டம் முழுதும் உள்ள 91 நூலகங்களுக்குமான தினமணி- அப்துல்கலாம் சிறப்பு மலர் புத்தகங்கள் ஒப்படைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.