விராலிமலை அருகே அனுமதியின்றி மதுவிற்றவர் கைது
விராலிமலை அருகே அனுமதியின்றி அரசு மதுபானம் விற்பனை செய்தவரை போலீஸார் கைது செய்தனர்.


விராலிமலை அருகே அனுமதியின்றி அரசு மதுபானம் விற்பனை செய்தவரை போலீஸார் கைது செய்தனர்.
விராலிமலை அருகே உள்ள மணமேட்டுப்பட்டி பகுதியில் அனுமதியின்றி தமிழ்நாடு மாநில வாணிப கழகம் (டாஸ்மாக்) மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக விராலிமலை போலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து அப்பகுதிகளில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் செல்வராஜ் தலைமையில் போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர். அதனைத்தொடர்ந்து அனுமதியின்றி அரசு மதுபானத்தை பதுக்கிவைத்து விற்பனை செய்து கொண்டிருந்த பெருமாள் மகன் முருகேசனை(37) கைது செய்து அவரிடம் விற்பனைக்காக வைத்திருந்த 25 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...