விருதுநகர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு நடத்திய கட்டுரைப் போட்டி பரிசளிப்பு விழா
ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு, மாவட்டத்தில் உள்ள கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு அடிப்படை கடமைகள் என்ற தலைப்பில் நடத்திய கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது.










