ராஜபாளையம், துரைச்சாமியாபுரம், செங்குட்டுவன் தெருவைச் சேர்ந்தவர் கருப்பையா (45). இவரது மனைவி அழகம்மாள். இவர்கள் இருவரும் கிராமத்தில் 10.5.2008-ம் தேதி நடைபெற்ற பொங்கல் விழாவின் வேடிக்கையை வீட்டின் முன்பு கட்டில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த அதே இடத்தைச் சேர்ந்த வீ.தவக்களை (எ) பெரியசாமி (35) என்பவர் கருப்பையாவை ஆபாசமாகப் பேசியுள்ளார். ஏன் இப்படி பேசுகிறாய் என்று கேட்டதற்கு, அரிவாளால் கருப்பையாவை வெட்டியுள்ளார். இதனைத் தடுக்கச் சென்ற அழகம்மாளையும் அரிவாளால் வெட்டியுள்ளார்.