கடனாநதி அணை நீர்மட்டம் 28 அடியாக குறைந்தது: நெற்பயிர்கள் கருகும் அபாயம்
திருநெல்வேலி மாவட்டத்தில் கடனாநதி அணையின் நீர்மட்டம் திங்கள்கிழமை 28 அடியாக குறைந்தது. ஒரு சில தினங்களில் அணை மூடப்படும் சூழல் உருவாகி உள்ளதால் இப்பகுதியில் 4,500 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.










