ரூ.3 கோடியில் கலசலிங்கம் மணிமண்டபம்: செப்.20-ல் திறப்பு விழா
விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழக வளாகத்தில்,


விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழக வளாகத்தில், அதன் நிறுவனத் தலைவர் தி.கலசலிங்கத்திற்கு ரூ.3 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மணிமண்டபம் திறப்பு விழா செப்டம்பர் மாதம் 20-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
இது குறித்து பல்கலைக்கழக வேந்தர் க.ஸ்ரீதரன் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பல்கலைக்கழகத்தின் வேந்தர் க.ஸ்ரீதரன் முன்னிலையில், வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் ஜி.விஸ்வநாதன், கலசலிங்கம் மணிமண்டபத்தைத் திறந்து வைக்கிறார்.
பட்டிமன்ற பேச்சாளரும் வங்கி அதிகாரியுமான எஸ்.ராஜா சிறப்புரையாற்றுகிறார்.
விழாவிற்கான ஏற்பாடுகளை துணை வேந்தர் ச.சரவணசங்கர், பதிவாளர் வெ.வாசுதேவன் ஆகியோர் தலைமையில் பேராசிரியர்கள் செய்து வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...